districts

img

சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

கரூர், நவ.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியக்குழு சார்பில் நிதி யளிப்பு, அரசியல் விளக்க பொதுக் கூட்டம் தோகைமலை பேருந்து நிலையத்தில் நடை பெற்றது.   கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எ.பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ஏ.சுப்பிரமணியன் வர வேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, கட்சி வளர்ச்சி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. சக்திவேல், இரா.முத்துச்செல்வன், கட வூர் வட்ட செயலாளர் பி.பழனிவேல் பங்கேற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார். முன்னதாக ஹரி ராமனின் பகத்சிங் கலைநிகழ்ச்சி நடை பெற்றது.