கரூர், டிச.3 - கரூர் மாவட்ட கம்யூனிச இயக்கத்தின் மூத்த தோழர் எஸ்.சண்முகசுந்தரம் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் ஒன்றிய குழு சார்பில் கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் உள்ள மறவாபாளையம் கிராமத்தில் சிறு விவசாய குடும்பத்தில் 15.09.1953 இல் பிறந்த தோழர் சண்முகசுந்தரம் தமிழ் இலக்கியம் பயின்றவர். கம்யூனிச கருத்து களால் ஈர்க்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப் பில் இணைந்தார்.
அதைத்தொடர்ந்து வாலிபர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் என அவரது வெகுஜன அரங்கப் பணிகள் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக பல்வேறு போ ராட்டங்களை தலைமையேற்று நடத்திய வர். தீண்டாமை பிரச்சனைகள் தலை தூக்கியபோது,அதற்கு எதிரான போராட்டங் களை நடத்தி இப்பகுதியில் நிலவிய தீண்டாமை வடிவங்களை ஒழித்ததில் பெரும் பங்கு வகித்தவர்.
தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பெரிதும் உதவியாக இருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக, கரூர் வட்டச் செயலாளராக, கரூர் ஒன்றி யக் குழுச் செயலாளராக திறம்பட பணி யாற்றியுள்ளார். அகில இந்திய விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாள ராக நீண்ட காலம் பணியாற்றிய தோழர் சண்முகசுந்தரம், உடல்நலக் குறைவால் கடந்த 17-10-2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார்.
படத்திறப்பு-நினைவஞ்சலி கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் நடை பெற்ற தோழரின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டத்திற்கு கரூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பூரணம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், தோழர் சண்முகசுந்தரத்தின் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரை நிகழ்த்தினார். கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே. கந்தசாமி, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.