districts

சிஐடியு மாநில மாநாடு திருச்சி பொன்மலை தியாகிகள் ஜோதி பயணத்திற்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு

கரூர், அக்.9 - திருச்சி பொன்மலை தியாகிகள் ஜோதி பயணத்திற்கு திருச்சி புறநகர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் சிறப்பான வரவேற்பு அளித்திட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மா னிக்கப்பட்டுள்ளது. சிஐடியு கரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத் திற்கு திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் வரவேற்று பேசி னார். திருச்சி மாவட்ட செயலாளர் சிவராஜ்,  நாமக்கல் மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகி யோர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவி லில் சிஐடியு மாநில மாநாடு நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. சிஐடியு மாநில மாநாட்டில் ஏற்றக்கூடிய பொன் மலை தியாகிகள் ஜோதி பயணம் திருச்சி  புறநகர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங் களில் நடைபெறுகிறது.  இந்த ஜோதி பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை துவக்கி வைக்கிறார். அக்டோபர் 25 முதல் 28  வரை ஜோதி பயணம் நடத்திடவும், இந்த பிரச்சார பயண கூட்டங்களுக்கு மாவட்டம் தோறும் உற்சாக வரவேற்பு அளிக்க, உரிய  பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப் பட்டது.