கரூர், டிச.2- கரூர் மாவட்டம் புகளூரில் பாரி நிறுவனத் திற்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் நிரந்தர தொழிலாளர்களுக்கான காலிப் பணி யிடங்களை, தொழிலாளர்களை கொண்டு நிரப்பாமல், பல்வேறு மாவட்டங்களில் மூடப் பட்ட பாரி கம்பெனிகளில் வேலை பார்த்த அதி காரிகளை பணியமர்த்தியுள்ளனர். இதை கண்டித்து வியாழனன்று முதல் தொழிலா ளர்கள் ஆலையின் உள்ளே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட தொழி லாளி செல்வராஜு என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள் ளார். போராடுகின்ற தொழிலாளிக்கு நிர்வாகம் உணவு வழங்க மறுத்து கேண்டீனை மூடிய தால், சகதொழிலாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள் ளது எனக் கூறி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். புகளூர் திமுக நகராட்சி தலைவர் சேகர், தொமுச மாவட்ட தலைவர் அண்ணா வேலு, சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் போராடி வரும் தொழிலாளர்களின் பிரச்சனையை உடனடி யாக தீர்வுக்கு கொண்டு வர வேண்டுமென நிர்வாகத்திடம் பேசியுள்ளனர்.
சிஐடியு கண்டனம்
இதுகுறித்து சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செய லாளர் சி.முருகேசன் ஆகியோர் தெரிவித்த தாவது: புகளூர் பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம், தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கு டன் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அமைதியான முறையில் ஆலையின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்து, அதற்கு மாறாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறையையும், பழிவாங்கும் செய லையும் ஆலை நிர்வாகம் செய்து வரு வதை சிஐடியு கரூர் மாவட்டக் குழு வன்மை யாக கண்டிக்கிறது. தொழிலாளர்களுக்கு எதிரான இச்செயலை ஆலை நிர்வாகம் உடனடியாக கைவிட்டு, போராடும் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.