கரூர், பிப்.1- கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி கள்-குடியிருப்பு பகுதிகளில் தற்போது வரை 3258 இல்லம் தேடிக் கல்வி மையங் கள் மூலம் 47,381 அரசு பள்ளி மாண வர்கள் இணைந்து பயன் பெற்று வருவ தாக ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரி வித்தார். தாந்தோணி பகுதியில் உள்ள காளி யப்பனூரில் நடைபெற்று வரும் இல்லம் தேடிக் கல்வி மையத்தை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இல்லம் தேடிக் கல்வியின் ஒரு பகுதி யாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி- இழப்புகளை ஈடு செய்யும் வகையில் தன்னார்வலர்கள் மூலம் தினம் தோறும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மாலை ஐந்து முதல் ஏழு மணி வரை குறைதீர்கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே மாணவர்களின் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மாண வர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்கப்படு கிறது. மாணவர்கள், பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறனை “இல்லம்தேடிக்கல்வி” மூலம் வலுப் படுத்தப்படுகிறது. பள்ளிசெல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக் கும் மீண்டும் பள்ளியில் கற்றல் வாய்பு வழங்கப்படுகிறது. பள்ளிக்கு தொடர்ந்து வருகை புரியாத மாணவர்களைக் கண்ட றிந்து, மீண்டும் பள்ளியில் சேரும் வாய்ப்பும் கிடைக்கிறது என்றார்.