districts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞ ருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர்  விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

கரூர் சக்கரபாளையம் மரகதபுரியைச் சேர்ந்தவர் வசந்த குமார்(23). இவரது உறவினரின் 15 வயது மகள் பள்ளிக்குச்  சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து  பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி 2022 செப்.19 அன்று க.பரமத்தி காவல்நிலையத்தில் புகார்  அளித்தார். அதன்படி, போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வசந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.நசிமாபானு,  குற்றவாளி வசந்தகுமாருக்கு போக்சோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என தீர்ப்பளித்தார்.  மேலும், வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து வசந்தகுமாரை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.