districts

img

அரவக்குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் சிபிஎம் வேட்பாளர் கணேசன் வாக்குறுதி

கரூர், பிப்.13 -  திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் அரவக் குறிச்சி பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.வி.கணேச னுக்கு சின்னாகவுண்டனூர், கொத்த பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம  பகுதிகளில் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்குச் சேகரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் ரா.இளங்கோ சிறப்புரையாற்றினார். கட்சியின் கரூர் மாவட்ட செயலா ளர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாமுகமது, அரவக் குறிச்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம்,  அரவக்குறிச்சி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன், அரவக் குறிச்சி திமுக பேரூர் கழகச் செயலா ளர் அண்ணாத்துரை  ஆகியோர் கலந்து  கொண்டனர். பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து சிறப்பாக வர வேற்பளித்தனர்.  வேட்பாளர் கே.வி.கணேசன் பேசுகை யில், அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட் பட்ட 1 ஆவது வார்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவ தில் முதன்மையாக இருப்பேன். அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதி களை நிறைவேற்றித் தர பணியாற்று வேன். பொதுமக்கள் 24 மணி நேரமும் தன்னை சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். தங்களது குடும்பத்தில் ஒரு வனாக கருதி எனக்கு அரிவாள், சுத்தி யல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக் குமாறு கேட்டுக் கொண்டார்.