districts

img

குமரியில் குளத்தில் மண் எடுக்கும் போராட்டம்: மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் செண்பகராமன்புதூர் வில்லச்சேரி குளத்தில் அஇவிதொச தலைமையில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தாழக்குடி, சுங்கான்கடை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் . இவர்கள் மண்பாண்டங்கள் செய்ய செண்பகராமன்புதூர் வில்லிசேரிகுளம், புலியூர்குறிச்சிகுளம், தலக்குளம், தமிழன் கல்லூரி அருகாமை குளம் உள்ளிட்ட சில குளங்களில் மட்டுமே மண் உகந்த நிலையில் இருக்கும்

இந்நிலையில் தற்போது கடந்த 3 ஆண்டுகளாக மண் எடுக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர் இதனால் மண்பாண்ட தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் மண்பாண்டங்கள் தேவையான மூலப் பொருள் கிடைக்காதமையால் இவர்களை வறுமை பெருந்துயருக்கு உள்ளாக்கி வருகிறது

இதனையடுத்து இன்று செண்பகராமன்புதூர் அருகே வில்லிசேரி உலகில் 150க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தலைமையில் குளத்தில் இறங்கி முன்னெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு குளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்

இதனையடுத்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவ இடம் விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அதிகாரிகளின் நிலைப்பாட்டில் நம்பக தன்மை இல்லாத காரணத்தினால் மீண்டும் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அவ்விடம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது

பின்னர் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் மற்றும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பை உணர்ந்து அவ்விடத்திற்கு விரைந்தனர் மேலும் இதற்க்கு மேல் இப்பிரச்சனையை கட்டுப்படுத்த இயலாது என்றறிந்த அதிகாரிகள் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று வருகிற 25 ஆம் தேதிக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வண்டல் மண், களிமண் உள்ளிட்டவைகளை எடுக்க உகந்த குளங்களில் மண்பாண்ட தொழிலுக்கு எடுக்க அனுமதி வழங்குவோம் என அஇவிதொச விடம் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்

இந்நிகழ்வில் சங்கத்தின் வட்டார செயலாளர் கே. ஐயப்பன் தலைமை வகித்தார் மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் செல்லசுவாமி, சங்கத்தின் மாவட்ட தலைவர் என். எஸ் கண்ணன், வட்டார தலைவர் எஸ். மிக்கேல், சிஐடியூ கன்வீனர் எஸ். சக்திவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வட்டார செயலாளர் சி.சுப்பிரமணியம் உள்ளிடோருடன் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்