நாகர்கோவில், ஏப்.23- மத உணர்வைத் தூண்டி மோதலை ஏற்படுத்தும் வகை யில் பேசியதாக எழுந்த புகா ரையடுத்து இந்து மகாசபா மாநில தலைவர் த.பால சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். புதுக்கடை அருகே முள்ளுவிளை பகுதியில் கடந்த 17-ஆம்தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்து மகா சபா மாநில தலைவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் த.பாலசுப்பிர மணியன் பேசிய வீடியோ பதிவை சமூக வலைத்தளங் களில் பலரும் அதிர்ச்சி அடைந் தனர். அதில் அவர், கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பிரமுகர் படு கொலை சம்பவத்தை குறிப் பிட்டு, இந்துக்களை பாது காப்பது நமது கடமை, கேர ளாவில் ஒருவரை வெட்டி னால் இன்னொருத்தரை வெட்டுவார்கள், தமிழ கத்தில் ஒருத்தருக்கு பத்து பேர், அடியாத மாடு பணி யாது என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி யிருந்தார். இதுகுறித்து புதுக்கடை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின்பேரில் த.பாலசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்த னர். இதையடுத்து தனிப் படையினர் சனியன்று காலை ஈத்தாமொழி தோப்பன்குடி யிருப்பில் உள்ள வீட்டி லிருந்து த.பாலசுப்பிர மணியனை அழைத்துச் சென்றனர். புதுக்கடை காவல் நிலையத்தில் அவரி டம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.