நாகர்கோவில், ஜன.25- கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில் நிர்வாகத்தி ற்கு வாடகை, குத்தகை பணம் செலுத்தாத கடைக ளுக்கு சீல் வைக்கப்படும் என இணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தர வின் பேரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு சொந்தமான 15 கடைகளையும், 27 வீட்டு குடியிருப்பு மற்றும் நன்செய், புன்செய் நிலங்க ளையும் தனிநபர் பலர் வாடகைக்கு எடுத்துள்ளனர். இதேபோல் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 24 கடைகள், 4 காலிமனை மற்றும் நன்செய், புன்செய் நிலங்களும், கொட்டாரம் நந்தவனத்திற்கு சொந்தமான 27 கடைகளும், நியாய வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் வாட கைக்கு எடுத்தவர்களும், குத்தகை க்கு எடுத்த வர்களும் திருக்கோவில் நிர்வாகத்திற்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கியை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதால் திருக்கோவில் நிர்வாகம் வருமா னம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே திருக்கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகையை உடனே செலுத்தாத வாடகைதாரர்கள் கடை மற்றும் வீடுகள் அதிரடியாக சீல் வைத்து பூட்டப்படும் என அவர் கூறி உள்ளார்.