17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளர் சிவசந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி – ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொறியாளரான சிவசந்திரன்(வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் பிறகு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை பொறியாளர் சிவசந்திரன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பொறியாளர் சிவசந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.