districts

img

பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வதா?

இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி கடற்கரை மிகவும் தனித்துவமானது. வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய மூன்று  முக்கிய கடல்கள் இங்கு சங்கமிப் பதைக் காணமுடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குக் கடற்கரையில்  நீரோடி முதல்  கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஆரோக்கியபுரம் வரை 46 கடற்கரை கிராமங்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கடல் சார் உணவுத் தேவையை கடற்கரை கிராம மீனவ மக்கள் நிறைவேற்றி வருகிறார்கள். மாவட்டத்தின் தொகையில் மீனவ மக்கள் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்துகின்றனர். இந்த நிலை யில், மீனவர்களின் வாழ்வாதாரத் தை சீரழிக்க, கன்னியாகுமரி மாவட்டத் தின் கடற்கரை பகுதியில் ஒன்றிய அரசு எண்ணெய் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இது கன்னியாகுமரியின் மீன்வளம், கடல்வளம், சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத் திற்கு ஆபத்தை உருவாக்குகிறது, இந்தத் திட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய அரசு இப்பணியை உடனடியாகக் கைவிட வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், ஹைட்ரோ-கார்பன் இயக்குநரகம் சமீபத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் (ஹெல்ப்) கீழ், இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், ஒன்றிய மீன்வளத் துறை செயலர் அபிலாஷ் லிகிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கன்னியாகுமரியை ஒட்டியுள்ள இந்தியாவின் தென் மாவட்ட மீனவர்களின் கடல் வளங்களின் முக்கிய ஆதாரமாக வாட்ஜ் வங்கி (மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதி) விளங்குகிறது.

ஒன்றிய அரசு, அறிவித்துள்ள திட்டம் செயல்படுத்தப்பட்டால், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். பொருளாதார ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  இது  குறித்து பொதுமக்களுடன் கலந்தா லோசிக்காமல் ஒன்றிய அமைச்சகம் எடுத்துள்ள முடிவு கெடுவாய்ப்பா னது” இதற்கான டெண்டரை திரும்ப பெற வேண்டுமெனக் குறிப்பிட்டுள் ளார்.

தங்க முட்டையிடும் வாத்தை கொல்வதா?
இதுகுறித்து நமது செய்தியாளரி டம் திங்களன்று பேசிய நாகர்கோவி லைத் தளமாகக் கொண்ட சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மற்றும் சமூக கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.லாசரஸ் கூறுகையில், குமரி மாவட்ட மக்கள் உணவுத் தேவைக்காகவும், இங்கு கிடைக்கும் அரிய பொக்கிஷங்களுக் காகவும் வாட்ஜ் வங்கியை நம்பியே உள்ளனர். எண்ணெய் வளம் குறித்து ஆய்வு நடத்துவதாகக் கூறி,  கன்னியாகுமரி போன்ற வாட்ஜ்  வங்கியை திட்டமிட்டுக் குறி வைப்பது தங்க முட்டையிடும் வாத்தை கொல்வதற்குச் சமமாகும்.

இப்பகுதி ஏற்கனவே பாது காக்கப்பட்ட பகுதியாக அறி விக்கப்பட்டதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 சதவிகிதம்  மீனவர்கள் வசிக்கிறார்கள். கன்னி யாகுமரி மாவட்டம் மட்டுமல்ல. திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்த மீனவர்களும் வாழ்வா தாரத்தை இழப்பார்கள்.  ஒன்றிய அரசின் இந்த முயற்சி மாவட்ட மக்களின் பாரம்பரியம், வேலை  வாய்ப்பை மட்டுமல்ல வாழ்வாதா ரத்தை அழித்துவிடும்.  பாதுகாக்கப் பட்ட பகுதியில் எண்ணெய் ஆய்வு தொடர்ந்தால் முழு சூழலியலும் அழியும். கன்னியாகுமரியின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த காலங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மீன வர்களின் வீடுகள் இடிந்து விழுந்தன. தேசிய பசுமைத் தீர்ப்பா யம் ஒரு உத்தரவில், கடல் அரிப்புக்கு ஆளாகும் கடற்கரை யோரங்களில் பெரிய அளவில் கட்டு மானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.

துறைமுகப் பகுதியில் இயங்கும் கப்பல்களில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவு, மீன்களைப் பாதிக்கும். அவை கடலின் பிற பகுதி களுக்கு இடம்பெயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடல் தளத்திற்கு  அடியில் எண்ணெய் மற்றும் வாயு வைக் கண்டறிய பயன்படுத்தப்படும் நில அதிர்வு, ஒலி அடிப்படை யிலான தொழில்நுட்பம் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகவும் இடை யூறு விளைவிக்கும் என்றார்.

மேலும் உலகம் முழுவதிலும், ஒரு சில பகுதிகளில் “வாட்ஜ் கரைகள்” உள்ளன. அவற்றில் ஒன்று கன்னியாகுமரி. கன்னியாகுமரி கடற்கரையின்  தென்மேற்குப் பகுதி  “வாட்ஜ் பேங்க் பகுதி” என   இந்திய மீன்வளத்துறை வரையறை செய்துள்ளது. கிட்டத்தட்ட 4,000 சதுர கிலோ மீட்டர் மைல்கள் இதில் அடங்கும். இது உணவளிக்கும் ஒரு பெரிய கிட்டங்கியாகும். மேலும் இந்தப் பிராந்தியத்தில் 200க்கும் மேற்பட்ட அரிய வகை மீன் இனங்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய அளவில் போராட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடித் தொழிலாளர் (சிஐடியு) கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி கூறு கையில், ஏற்கனவே, கடந்த அக்டோ பர் மாதம் தேசிய அளவில் மீனவர் களும் மீன் தொழிலாளர்களும் காக்கி நாடாவில் சந்தித்து தேசிய அளவில் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி தேசிய நிர்வாகி கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நான் பங்கேற்க உள்ளேன் போராட்ட தேதி குறித்த அறிவிப்பு இந்த கூட்டத்தில் வெளியிடப்படும். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூட்டமைப்பின் மாநிலக்குழு கூட்டம் பிப்ரவரி 21 ஆம் தேதி நடை பெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் போராட்டம் குறித்து விரிவாக திட்டமிட உள்ளோம் என்றார்.