குமரி மாவட்டம் சுசீந்திரம் வருவாய் கிராமத்தில் உள்ள பதினெட்டாம் படியில் சுமார் 65 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களை நீர்நிலையைக் காரணம் காட்டி குடியிருப்புகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் நோட்டீஸ் அளிக்க பட்டுள்ளது. அந்த இடத்தினை சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் செல்லசுவாமி, முன்னாள் எம்பி பெல்லார்மின், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட தலைவர் சைமன் சைலஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.