அருமனை, ஏப்.2- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாலைக்கோட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிறு காலை யில் குருத்தோலைப் பவனி நடைபெற்றது. மாலைக்கோடு சந்திப்பில் கத்தோலிக்க ஆல யத்திற்கு சொந்தமான இரண்டு சென்ட் நிலம் உள்ளது. ஞாயிறு குருத்தோலை பவனி அவ்விடத்திலிருந்து ஆரம்பிப்பதற்காக சனிக்கிழமை மாலையில் அப்பகுதி யினை அலங்காரம் செய்தனர். இதைக் கண்ட பாஜக வினர் அருமனை காவல் நிலையத்தில் சென்று மாலைக் கோடு சந்திப்பில் கிறிஸ்தவர்கள் குருசடி கட்டுகிறார்கள் என்று புகார் கொடுத்து கட்டுமானப் பணியை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டு கொண்டனர். இந்நிலையில் அருமனை போலீசார் திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தலைமையில் இர வோடு இரவாக குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் விசாரணையில் ஞாயிறு காலையில் குருத்தோலைப் பவனி இப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்காக ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டது தெரியவந்தது. என்றாலும் அதி காலையில் பிஜேபி யின் பொய் புகாரால் போலீஸ் குவிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத் தியுள்ளது.