நாகர்கோவில், ஜூன் 12- கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க ராமன் அறிவித்து உள்ளார். ராஜாக்கமங்கலம் அருகே உள்ள முட்டம் தூய குழந்தை ஏசு தெருவை சேர் ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவு லின் மேரி (48). இவர்களுக்கு ஆலன் (25), ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜூடன், ஆலன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார் கள். ஆரோன் சென்னையில் உள்ள கல்லூரியில் பொறி யியல் படித்து வருகிறார். இதனால் வீட்டில் பவுலின் மேரிக்கு துணையாக, அவ ருடைய தாயார் திரேசம் மாள் (90) இருந்து வந்தார். இந்த நிலையில் ஜூன் 6-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த பவுலின் மேரியும், திரேசம்மாளும் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர். 15 பவுன் நகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்டன. வெள்ளிச் சந்தை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். கொலை யாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொலை நடந்த வீட்டின் பக்கத்து தோப்பில் ஒரு மங்கி குல்லா வும் ஒரு தேய்ப்பு பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலையாளி பயன் படுத்திய மங்கி குல்லாவாக இருக்கலாம் என்று கருதி காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள 2 கி.மீ. தூரத்துக் குள் பயன்படுத்தப்பட்ட செல்பேசி தகவல் பரி மாற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரட்டைக்கொலையில் ஈடுபட்ட குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் சன்மா னம் வழங்கப்படும் என்று குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளர் தங்க ராமன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பான தகவல் வாட்ஸ்-அப் மூலம் பரப்பப் பட்டு வருகிறது. தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் :99444 78704 ஆகும். கொலை நடந்த பகுதி யில் இருந்து 4 நபர்கள் தலை மறைவானது தெரிய வந்துந் ளது. அவர்களை தேடி கண்டு பிடிக்க தனிப்படையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.