அமைச்சர் மனோ தங்க ராஜ் வீட்டிருகே கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் பாலூர் சந்திப்பு அருகே தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வீடு உள்ளது. அந்த வழியாக அசீம் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காரிலிருந்து புகை வெளியேறியது. உடனடியாக காரை நிறுத்திய சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்,.இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.