districts

img

குமரி: சுற்றுலா தலங்களுக்கு செல்ல 3 நாட்கள் தடை  

குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பிறப்பு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து வர இருக்கின்றன.  இதனால், பொதுமக்கள் அதிக அளவில் கூட்டம் கூடாமல் இருக்க அரசு எச்சரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை, நீர்வீழ்ச்சி பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.    

இதன்படி வருகிற 31ந்தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அரசிற்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;