districts

img

பணி மாறுதலில் விதிமுறைகள் மீறல்: கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஜூலை.12-  தோட்டக்கலைத்துறை இயக்கு னர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்க ளின் பணி மாறுதல்களில் தொடர்ந்து விதி முறைகள் மீறப்படுகின்றன. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்த துறை அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கப்படாமல் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு வழங்காமல் முறைகேடாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  அமைச்சு பணியாளர்களின் மாறுதல்க ளில் தொடர்ந்து அரசின் விதிமுறைகள் மீறப்படுவதை உரிய விசாரணை செய்து இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அமைச்சுப் பணியாளர்களின் மாறுதல் நிய மனத்தில் அரசின் விதிமுறைகளை முழுமை யாக கடைபிடித்து முன்னுரிமை படி செயல்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். மாலதி தலைமை தாங்கி னார்.  மாவட்டச் செயலாளர் ஆர். லோக நாதன்ஆர்.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்ச பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா. பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எல். அரி கிருஷ்ணன், வேளாண்மைத் துறை சங்கத்தில் மாநில துணைத் தலைவர் எஸ்.வெங்கடேசன், தொழிலாளர் துறை மாவட்ட துணை தலைவர் எம். குமார், நெடுஞ்சாலைத்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். ராமர், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஏ.வேலு, பொதுப் பணித்துறை மாநில செயலாளர் இராம. வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் பேசினர்.