கடலூர், ஜன. 6- விருத்தாசலம் வட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் சாராட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட இருளக்குறிச்சி ஊராட்சி நரசிங்க பெருமாள் கோவில் தொடங்கி பணஞ்சாலை வரை உள்ள சாலை பணி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, சாலையை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நகர ஒருங்கிணைப்பாளர் கலைச் செல்வன், நகர்குழு உறுப்பினர்கள் நெல்சன், மார்க்கெட் சேகர், செந்தில் கிளைச் செயலாளர் வேலன், சாமிதுரை ஆகியோர் உடனிருந்தனர்.