districts

img

போக்குவரத்திற்கு லாயக்கற்ற கடலூர் சரவணா நகர் இணைப்பு சாலை

கடலூர், ஜன. 7 சென்னையில் இருந்து நாகப்பட்டி னத்திற்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கடலூர் மஞ்சக்குப்பம், பாரதி சாலை, அண்ணா மேம்பாலம் வழியாக செல்வதால் மஞ்சக்குப்பம் மற்றும் பாரதி சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலூர் செம்மண்டலம் வழியாக, கம்மியம்பேட்டை ஜவான்பவன் பைபாஸ் சாலை வழியாக, திருப்பாதி ரிப்புலியூர் உழவர் சந்தை வழியாக பேருந்து லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் திருப்பாதிரிப்புலியூர் வழியாக பண்ருட்டி பாலூர் மற்றும்  கடலூர் பேருந்து நிலையத்திற்கும் பல்வேறு பகுதிகளுக்கும் வாக னங்கள் சென்று வந்ததால்  திருப்பாதிரிப்புலியூர் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. இதன் காரணமாக திருப்பாதிரிப் புலியூர் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக பேருந்துகள் கனரக வாகனங்கள் சென்று வர நட வடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சாலையை  தற்போது அனைவரும் பயன்படுத்தி வருவதால் அந்த சாலை பல்லாங்குழி போல் குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.  மேலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் கழிவு நீர் முழுவதும் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக சாலையை சீரமைத்து, முறையான வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.