districts

மாணவி தற்கொலை : நீட் பயிற்சி மைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், ஏப்.6- மாணவி சாவிற்கு காரணமான நீட் தேர்வு பயிற்சி மைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் ஆபத்தானபுரத்தை சார்ந்த உத்திராபதி மகள் நிஷா கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 399 மதிப் பெண்கள் பெற்று, நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். தற்போது ஒரு வருட பயிற்சி பெற்று வந்ததால் படிப்பில் முன்னேற்றம் அடைந்து வந்தார். இந் நிலையில் பயிற்சி மையத்தில் 400 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கி தனி யாக பயிற்சி வழங்கப் பட்டுள்ளன. ஆனால் நிஷா 399 மதிப்பென் பெற்றதால் சரியான முறையில் பயிற்சி  வழங்காமல் தனித்தனி யாக பயிற்சி வழங்கப்பட் டுள்ளது. இதன் காரண மாக நிஷா மன உளச்சலில்  இருந்துள்ளார். சம்பவத் தன்று சிறப்பு வகுப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே நிஷா தற் கொலைக்கு காரணமான பயிற்சி மைய நிர்வாகிகள் மீது முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  வேண்டும். மகளை இழந்து வாடும் உத்திராபதி குடும் பத்திற்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நிஷா குடும்பத்திற்கு ரூ.10  லட்சம் நிவாரணம் வழங்க  தமிழ்நாடு அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.