districts

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

கடலூர்,அக்.11- சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவி ஒரு வருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்ப ரம் நகர காவல்துறையினர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மாணவர்களிடம் தனித்தனி யாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த மாணவி சிதம்பரம் அருகே வெங்காயதலமேடு கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அங்குள்ள பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. தாலி கட்டிய மாணவர் சிதம்பரம் அருகே வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், கீரப்பாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரிடமும் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முகுந்தன் மற்றும் ரம்யா ஆகியோர் விசா ரணை நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து மாணவி கடலூரில் உள்ள காப்ப கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவனை குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, காவல் மற்றும் கல்வித் துறை இணைந்து மாண வர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், பாலியல் ரீதியான நடைமுறைகள் குறித்தும் விளக்கம் தரப்பட்டது. இந்நிகழ்வில் சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் ரவிசங்கர் சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வா ளர் நாகராஜன் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

;