கடலூர், ஏப். 17- கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னம் பலம் தலைமையில் பண்ருட்டியில் நடை பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வீ.திருமுருகன் உட்பட 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் குவாரி வழங்காமல் வஞ்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தினசரி ஒரு நடை மாட்டு வண்டிகளுக்கு மணல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஏப்ரல் 26 அன்று மாவட்டம் முழுவதும் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களை ஒன்று திரட்டி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.