districts

கஞ்சா விற்பனை: 5 பேர் கைது

கடலூர்,ஏப்.9-  கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பு  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் முதுநகர், புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி தெர்மல் ஆகிய பகுதிகளில் இருந்த கடைகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை  அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லிக்குப்பம் சுகுமார், நெய்வேலி சாவித்திரி, முதுநகர் தினேஷ், சாலக்கரை மாரியப்பன், திருவந்திபுரம் சிவன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

;