மாமல்லபுரம், மே 11- கூவத்தூர் அருகே கட லோரத்தில் ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடற்கரை ஓரம் வீடுகட்டி குடியிருக்கும் மீனவர்களின் வீடுகள் ஏற்கனவே சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. தற்போது வலைகளை காயவைக்கும் கட்டிடம் மற்றும் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடும் கூடாரம் என அனைத்து கட்டி டங்களும் இடிந்து கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள் ளது. வழக்கத்தை விட சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டு அலை கள் கரைக்கு வந்துள்ளன. கடலோரத்தில் படகு களை நிறுத்த இடம் இல்லாமல் சாலைகளில் நிறுத்தும் நிலை உருவாகி உள்ளது. மேலும் பேருந்து போக்குவரத்தும் மீனவ கிராமங்களுக்கு வருவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆலிக்குப்பம், கடலூர் சின்னகுப்பம், பெரிய குப்பம் ஆகிய 3 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புயல், கடல் சீற்றம் ஏற்படும் போது உயிர் பயத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அசானி புயல் காரணமாக கடலில் கூடுதலாக அலை கள் சீற்றத்துடன் காணப்படு கிறது. இதனால் கடல் அரிப்பு மேலும் அதிகரித்து வருகி றது.