கடலூர்,ஜூலை.9- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவி னங்குடி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட கய வர்கள் கைது செய்யக் கோரி யும், மாணவர்களின் நட வடிக்கையை கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திட்டக்குடி வட்டச் செய லாளர் வி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். எஸ்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். ராஜேந்திரன், வி.மேரி, மாதவி, வட்டக்குழு உறுப்பி னர்கள் டி.வரதன், பி.அர விந்த், விவசாய சங்கத்தின் ஆர் மகா லிங்கம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆர்.விஸ்வ நாதன், மாதர் சங்க வட்டச் செயலாளர் முத்துலட்சுமி, வாலிபர் சங்க வட்டச் செய லாளர் சண்முகம் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர்.