districts

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்குக

கடலூர், மே 26 - நெய்வேலியில் என்எல்சி இன்கோசர்வ் ஹவுசி கோஸ் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா நடைபெற்றது. எட்டு ரோட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, பொருளாளர் என்.சண்முகம் தலைமை தாங்கினார். விடுபட்ட ஏஎம்சி, ஏஎம்சி இல்லாத குறுகிய  கால அனைத்து தொழிலாளர்கள், மேற்பார் வையாளர்களை முன்னுரிமைப் பட்டியலில் இணைத்து மருத்துவப் புத்தகம் வழங்க வேண்டும். 2020 - 21இல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 510 தொழிலாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். 2021-22ஆம்  ஆண்டுக்கான பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு பணி ஆணை வழங்க வேண்டும்.  2020 புதிய ஊதிய மாற்று ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் பொதுச் செயலர் டி.அமிர்தலிங் கம், பொருளாளர் எம்.சீனிவாசன், சங்கத்தின்  துணைத் தலைவர் ஆர்.பாலமுருகன், சிஐடியு நிர்வாகிகள் எஸ்.திருஅரசு, பொதுச் செயலாளர் ஜெயராமன், ஆரோக்கியதாஸ் ஆகியோர் பேசினர்.