districts

img

பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் தகவல்

சிதம்பரம், ஜன் 21- சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் சனிக் கிழமை (ஜன. 21) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அலையாத்தி காடுகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா விடுதிக்கும் சென்றார். சுற்றுலா பயணிகளிடம் மேலும் இங்கு என்ன வசதி செய்து கொடுக்க வேண்டும்,  தற்போதுள்ள வசதிகள் எப்படி உள்ளது? என்றும் கேட்டறிந்தார்.  அப்போது, அதிகாலையில் படகு சவாரி செய்ய அனு மதிக்க வேண்டும்என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “ பிச்சா வரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து அதி காரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்”என்றார். கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், சுற்றுலாத்துறை உதவி மண்டல பொது மேலாளர் இமய வரம்பன், மண்டல மேலாளர் கார்த்திகேயன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் குமார், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.