சிதம்பரம் தச்சன்குளம் பகுதியில் வசித்த பொது மக்களின் வீடுகளை நீர்நிலை ஆக்கிரமிப்பு என நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் இடித்துள்ளனர். அவர்களுக்கு அந்த இடத்தை அளவீடு செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் ரவியிடம் சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் மனு அளித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர்குழு உறுப்பினர்கள் அமுதா, மல்லிகா, வழக்கறிஞர் போஸ் தச்சன்குளம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.