கடலூர், பிப்.4- மக்கள் ஒற்றுமை மேடை யின் கடலூர் நகர அமைப்பாளர் எஸ்.கே.பக்கிரான், திருப்பா திரிப்புலியூர் சிக்னல் அருகில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக வடலூர் வள்ள லார் சத்திய ஞான சபைக்கு காய்கறிகள் மற்றும் அரிசி வழங்கி வருகிறார். அந்த வகை யில் வடலூர் சத்திய ஞான சபை யில் ஞாயிறன்று (பிப்.5மூ ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி சத்தி ஞான சபைக்கு காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காய்கறி கடை உரிமையாளரும், பிபிஎம் மாவட்ட குழு உறுப்பினரும், மக்கள் ஒற்றுமை மேடையின் நகர அமைப்பாளருமான எஸ்.கே.பக்கிரான் தலைமை தாங்கி னார். கடலூர் வர்த்தக சங்கத் தலை வர் ஜி.ஆர்.துரைராஜ் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 6 டன் அளவிலான காய்கறிகளும், 50 மூட்டை அரிசியும், மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களை யும், சரக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தனர். அப்போது தேவி கேஸ் உரிமையாளர் பசு வலிங்கம், வர்த்தக சங்க பேரமைப்பு மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ், அன்சாரி, சரவணன், பாலாஜி, செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.