கடலூர், ஏப். 1- கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 2 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா சனிக்கிழமை (ஏப். 1) நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா சிறப்பு நீதிமன்றங்களை திறந்து வைத்து பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் 47 காவல் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலை யங்கள் உட்பட மொத்தம் 58 காவல் நிலையங் கள் உள்ளன. இங்கு 47 நீதிமன்றங்கள் உள்ளன. புதிதாக 2 திறக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் சராசரியாக 9 காவல் நிலை யங்களுகு ஒரு நீதிமன்றம் என்ற அளவில் உள்ளன. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகத்தை திருப்பிப் போட்ட கொரோனா வைரஸ் காரண மாக 2 ஆண்டு களுக்கு பொது முடக்கம் கடை பிடிக்கப் பட்ட காலத்திலும் வீடியோ கான்பரசிங் மூலம் நீதிபதி கள் அதிகளவில் வழக்கு களை முடித்து வைத்தனர். இந்தியாவில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் மொத்த மாக 71 லட்சம் வழக்கு களை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் சென்னை உயர்நீதி மன்றம் 2 ஆண்டுகளில் 14 லட்சம் வழக்குளை முடித்து வைத்து இந்தியா விலேயே முதல் மாநில மாக திகழ்கிறது. இது நீதி பதிகளின் கடின உழைப் புக்கு கிடைத்த வெற்றி யாகும். நீதிமன்றங்கள் மக்க ளுக்காக உருவாக்கப் பட்டவை. கடலூர் மாவட்டத் தில் விபத்து வழக்குகளை விரைந்து முடிக்க 2 புதிய நீதிமன்றங்கள் திறக்கப் பட்டுள்ளன. இவை செயல்படுவதற்காக 4 நீதிமன்றங்களில் இருந்து முதல் சிறப்பு நீதிமன்றத் திற்கு 544 வழக்குகள் மாற்றப்பட்டுள்ளன. 2ஆவது சிறப்பு நீதிமன்றங் களுக்கு 440 வழக்கு கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளன. வழக்கறி ஞர்கள் எந்த வழக்குக ளுக்கு முக்கியத்து வம் அளிக்க வேண்டும், எந்த வழக்குகளுக்கு 2ஆவது இடம் அளிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஆஷா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சி.வெ.கணேசன் ஆகியோரும் பேசினர். இதில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கணகாணிப் பாளர் ராஜாராம், பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் துரை.பிரேம் குமார், லாயர்ஸ் அசோசி யேஷன் சங்கத் தலைவர் ராம நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக மாவட்ட முதன்மை நீதிபதி ஜவகர் வரவேற்றார். நீதிபதி பிரபாகர் நன்றி கூறினார்.