districts

img

காதலர் தினத்தில் கடலூரில் கவியரங்கம்-பட்டிமன்றம்

கடலூர், பிப்.15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கமும் இணைந்து பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று கவி யரங்கம், பட்டிமன்றம் நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி தலைமை தாங்கி னார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.மாதவி வரவேற்றார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வினோத் குமார், நிர்வாகிகள் எஸ்.செந்தமிழ் செல்வன், எம்.கலைவாணன், எழுத்தாளர் சங்க நகரத் தலைவர் ஜா.கேத்தரின், மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.ரேவதி, சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். “மனிதர்களும் மாடுகளும்” என்ற தலைப்பில் கவிஞர் எழி லேந்தி தலைமையில்  கவியரங்கம் நடைபெற்றது. ஓவியர் ரமேஷ், கவிஞர்கள் அன்பன் சிவா, மீனாட்சி, அனிதா, சக்தி பிரியா, உமா மகேஸ்வரி ஆகியோர் கவிதை வாசித்தனர். காதலர் தினம் பட்டிமன்றத்தில் “காதலர்கள் அன்பை சார்ந்து” என்று கவிமனோ, ஆர்.அமர்நாத் ஆகியோரும், “சமூக அன்பை சார்ந்தது” என்று கவிஞர் எஸ். வெற்றிச்செல்வி, எம்.கலைச் செல்வி, எம்.மருதவாணன் ஆகி யோரும் பேசினர். இறுதியில் பட்டிமன்ற நடுவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு “சமூக அன்பை சார்ந்தது” என்று தீர்ப்பு கூறினார். மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவானந்தம் நன்றி கூறினார்.