கடலூர்,ஜூலை31- என்.எல்.சி நடத்தப்படுகின்ற போட்டி தேர்வுகளில் தமிழகத்தை சார்ந்தவர்கள் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர் கோ.மாதவன் வெளியி டப்பட்டுள்ள அறிக்கை வருமாறு; வேலைவாய்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த 2022 ஜூலை 19-ம் தேதி என்.எல்.சி. நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அந்தப்பட்டியலில் உள்ள மொத்தமுள்ள 299 நபர்களில் ஒருவர்கூட தமிழ் நாட்டை சேர்ந்த வர் இடம் பெறவில்லை. என்.எல்சி நடத்தப்படுகின்ற போட்டி தேர்வுகளில் தமிழ கத்தை சார்ந்தவர்கள் தேர்ந்தெடுக் கப்படுவதில்லை. எனவே, என்.எல்சி நடத் தப்படுகின்ற தேர்வுகள் குறித்து பலத்த சந்தே கம் எழுந்துள்ளது . என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாரிசுகள் பொறியாளர் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தும், என்.எல்.சி. இந்தியா நிறு வனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது பல்வேறு சந்தேகங் களை உருவாக்குகிறது. இந்த தேர்வு முறை யை ரத்து செய்ய வேண்டும் என தொழி ற்சங்க கூட்டமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் ப்பட்டு நிலுவையில் உள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு எந்தவொரு நிரந்தர வேலை வாய்ப்பையோ, உரிய இழப்பீட்டையோ வழங்காத என்.எல்.சி. இந்தியா நிறுவனம்அப்பகுதி மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நிறுவ னத்தில் காலியாக உள்ள வேலை வாய்ப் பினை முழுமையாக நிலம், வீடு கொடுத்த வர்களுக்கும், காண்ட்ராக்ட் தொழிலா ளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். என்.எல்.சி.நிறுவனம் பொறியாளர் வேலைவாய்ப்பில் நடந்து முடிந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்தும், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்க உள்ள ஆவண சரி பார்ப்புக்கு பிறகு மருத்துவ பரிசோத னையை உடனடியாக, ரத்து செய்ய வேண்டும். இந்த பொறியாளர் பணியி டங்களை நிரப்ப தமிழகத்தை சேர்ந்த தகுதி யுள்ள நிலம் வீடு கொடுத்தவர்களின் வாரிசுகளையும், காண்ட்ராக்ட் தொழிலாள ர்களுக்கு முன்னுரிமை அளித்தும் பணி யமர்வில் வாய்ப்பளிக்க தற்போது நடை பெற்றுள்ள இந்த தேர்வு முறையை ரத்து செய்து புதிய தேர்வு முறை மூலம் தேர்வு செய்ய வேண்டும்.