districts

தரமற்ற உணவகம்: ஓட்டுநர்-நடத்துநர் பணியிடை நீக்கம்

கடலூர், மார்ச் 15- தரமற்ற உணவகத்தில் பேருந்தை நிறுத்தியதற்காக அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடந்துநர் மீது போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 11 இடங்க ளில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் பணிமனை செயல்படுகிறது. இதில், விருத்தாசலம் பணிமனையிலிருந்து சென்னைக்கு பேருந்து இயக்கப்படு கிறது. கடந்த 10ஆம் தேதி விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்து மீண்டும் விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, விக்கிரவாண்டியில் உள்ள ஒரு சாலையோர உணவகத்தில் பயணிகள் சாப்பிடுவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அங்குச் சென்ற போது அங்கு பரி மாறப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்ததாம். மேலும், எந்தெந்த உணவகங்களில் நிறுத்த வேண்டும் என அரசு பட்டியலிட்ட பட்டியலில் அந்த உணவகம் வரவில்லையாம். எனவே, இதுகுறித்து பயணிகள் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரிடம் கேள்வி எழுப்பியும் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லையாம். இதுகுறித்து பயணிகள் தரப்பில் விருத்தாசலம் பணிமனையில் புகார் அளிக்கப்பட்டது. கடலூர் மண்டல பொதுமேலாளர் மாரிமுத்து உத்தர வின்பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை தொடர்ந்து ஓட்டுநர் விஜயகுமார், நடத்துநர் சேட்டு ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.