districts

img

தேசிய கல்விக் கொள்கை கடலூரில் கருத்து கேட்பு கூட்டம்

 கடலூர்,அக்.9-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.  சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்வியாளர் ஆயிஷா நடராஜன் தலை மையில் நடைபெற்ற இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் தொடக்க கல்வி குறித்து, ஆசிரியர் விக்டர் ஜெய சீலன், உயர்நிலை கல்வி குறித்து ஆசிரியை தெரசா கேத்தரின், பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் எம்.கலைச்செல்வன்,  மேல்நிலை கல்வி குறித்து, ஆசிரியர் பீட்டர் பெர்னாண்டஸ், பொறி யியல் கல்வி சார்பில் பிரபு, மருத்துவ கல்வி சார்பில் டாக்டர் இளந்திரையன் ஆகியோர் பேசினர்.  கல்வியும் அறிவியலும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் பாலகுருநாதன், கல்வியும் மன நலமும் என்ற தலைப்பில் மனநல ஆலோ சகர் கோமதி, மாணவர் சங்கத்தின் தலைவர் எஸ்.குமரகுரு உள்ளிட்டோர் பேசினர்.

;