districts

மினி மாரத்தான்-சதுரங்கப் போட்டிகள்: கடலூரில் மாதர் சங்கம் அழைப்பு

கடலூர், செப். 22- கடலூரில் நடைபெறும் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி நடைபெறும் மினி மாரத்தான், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவதால் மாணவர்கள், இளைஞர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில மாநாடு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கடலூரில் நடைபெறு கிறது. பெண்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் வரும் 24 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை (செப். 24) காலை 10 மணிக்கு தேவனாம்பட்டி னம் பெரியார் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதை போட்டி நடை பெற உள்ளன. இந்த போட்டிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களும் பங்கேற்கலாம்.
மினி மாரத்தான்-சதுரங்கம்
போதைக்கு எதிராகவும், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை (செப். 25) காலை 6 மணிக்கு கடலூர் டவுன்ஹாலில் துவங்கி சில்வர் பீச்சில் (வெள்ளி கடற்கரை) முடிவடைகிறது. இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் பங்கேற்கலாம். ஞாயிற்றுக்கிழமை (செப். 25) காலை 10 மணிக்கு கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் சதுரங்க போட்டி நடைபெறுகிறது.  மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க விரும்புவர்கள் என்கிற செல்பேசியில் 7904149191, 9443222310, 9941425119 தொடர்பு கொள்ளலாம் என்று மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் பி.தேன்மொழி தெரி வித்திருக்கிறார்.