districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கடலூர், ஏப். 8- கடலூர் டாஸ்மாக் நிறுவனத்தில் சரக்கு களை ஏற்றி, இறக்கும் தொழிலில் 65 தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஒரே கணக்கில் கொண்டு வருவதற்கு ஒப்பந்தக் காரர்களும் டாஸ்மாக் நிர்வாகமும்  ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சிஐடியு சார்பில் பலமுறை வலியுறுத்தியும் கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படவில்லை. கோரிக்கைகள் சம்பந்தமாக பலமுறை ஒப்பந்தக்காரர்களிடமும், டாஸ்மாக் நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி யும் எந்த பயனும் இல்லை. இந்த சூழ்நிலை யில், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முருகன், செயலாளர் தண்டபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பை யன், மாவட்ட இணைச் செயலாளர் வி.சுப்பு ராயன், நிர்வாகிகள் மோகன், சரவணன், முத்து, கிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். இதற்கிடையே டாஸ்மாக் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடி யாக கூலி வழங்குவதாக ஒப்புக் கொண்ட னர். அதனடிப்படையில் அனைவரும் பணிக்கு  திரும்பினர்.