districts

img

மக்கள் கோரிக்கைகளை வென்றெடுப்போம்!

கடலூர் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, தொழில்துறை ஆகிய மூன்றும் மிக முக்கிய மான தொழில்களாகும். ஆனாலும், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கூட்டுறவு கடன், பாசனம் உள்ளிட்ட வசதிகளை உறுதிப்  படுத்த வேண்டியது அவசிய தேவையாகும். உரம், யூரியா, இடு பொருட்களின் மானியம் முழுமையாக வெட்டப்பட்டதால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி பதுக்கி  வைக்கும் வியாபாரிகள், விலையை பண்படங்கு உயர்த்தி விற்கும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2040, கரும்பு டன்னுக்கு ரூ.2752 விலை அறி வித்துள்ளது. இது போதுமானதல்ல, நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,000, கரும்பு டன்னுக்கு ரூ.4000 விலை வழங்க வேண்டும். பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதித்து விளைவாக சிறு-குறு விவ சாயிகளுக்கு இன்சூரன்ஸ் கிடைப்பது கன வாக மாறியுள்ளது. குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் முன்பே திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி அவசர கோலத்தில் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் -நாகப்பட்டினம் சாலை, விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலை, சிதம்பரம் - ஜெயங்கொண்டம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம், கூடுதல் இழப்பீடு கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீர்வு காணாமல் உள்ளது.

என்.எல்.சி நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியது கட்டாயமாகும். பழப்பு நிலக்கரி வெட்டி எடுக்க நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிரந்தர வேலை வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.  இம்மாவட்டத்தில் சொந்த  வீட்டு மனையில்லாமலும், மனைக்கு பட்டா இல்லாமலும், பல்லாண்டு காலம் வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு  இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவது சரியானதல்ல. அனைவருக்கும்  வீடு கட்டித்தர வேண்டும். வீடு கட்டும் திட்டங்களில் நிதியை 5 லட்சமாக உயர்த்த வேண்டும். கடலூர் மாவட்ட அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்தி நவீனப்படுத்தி உயிர் காக்கும் மருந்துகள், அனைத்து சிறப்பு பிரிவுகளுக்கு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.  கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட  விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர்  உள்ளிட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். காரைக்கால், மன்னார்குடி, ராமேஸ்வரம், உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் கடலூரில்  மீண்டும் நின்று செல்ல வேண்டும்.  மாவட்டம் முழுவதும்  சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர்படுத்த வேண்டும் என்கிற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு இன்று கடலூர் புதுப்பாளையத்தில் நடைபெறுகிறது.