கடலூர், ஜூன் 2- பண்ருட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்ருட்டி அரசு தலைமை மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும், அரசு தலைமை மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் , செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும், நாய், தேள், பாம்பு போன்ற விஷக்கடி தடுப்பு மருந்துகளை 24 மணி நேரமும் இருப்பு வைத்து மக்கள் உயிரை பாதுகாக்க வேண்டும். புறக்காவல் நிலையத்தை மருத்துவ மனை நுழைவாயில் அமைக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழி வறைகளை 24 மணி நேரமும் பராமரிக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் குடிதண்ணீர், சுடு தண்ணீர் ஆகியவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்களின் நிதியை பெற்று அடிப்படை வசதிகளான படுக்கை வசதி, கூடுதல் கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. வாலிபர் சங்கம் வட்டச் செயலாளர் எஸ்.வினோத்குமார், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜென்மராக்கினி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் வாலிபர் சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ்.சங்கர், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் பி.ஸ்ரீபன், தலைவர் ஜி.இன்பரசு துணைச் செயலாளர் ஏ.ஜீவா, வட்டத் தலைவர் வி.விஜயராஜ், மாதர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ரேவதி, பகுதி தலைவர் டி.ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.