districts

img

குமார், ஆனந்தன் நினைவு தினம்: வாலிபர்கள் ரத்ததானம்

கடலூர், ஜூன் 26- குமார், ஆனந்தன் நினைவு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடலூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்த கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார், ஆனந்தன் 22ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று (ஜூன் 26) அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி வாலிபர் சங்கத்தின் சார்பில் அவர்கள் பிறந்த புதுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் என்.ஆர்.காந்தி தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம்.n ஜாதிலிங்கம், தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அன்பரசன், மாவட்டச் செயலாளர் ஆர்.பிரகலாதன், வாலிபர் சங்கத்தின் கடலூர் நகர தலைவர் செந்தமிழ்செல்வன், கடலூர் ஒன்றியத் தலைவர் கலைவாணன், செயலாளர் அரசன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் கவியரசன் பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர்கள் சிவலொகம், முரளி, குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பொருளாளர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நினைவிடத்தில் அஞ்சலி
முன்னதாக புதுப்பாளையத்தில் உள்ள அவர்களது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.