கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை நகர்புறங்களில் விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஆர். அமர்நாத் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடலூரில் மனைப் பட்டா இல்லாத மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிசை வீட்டில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் புதிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.
கடலூரில் சாலை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மாற்று இடம் மற்றும் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் எம். சிவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். ஆளவந்தார், எஸ்.கே. பக்கிரான், எஸ். தட்சிணாமூர்த்தி, மாநகர குழு உறுப்பினர்கள் கே. ஸ்டாலின், வி.திருமுருகன், டி.எஸ்.தமிழ்மணி, எஸ். கருணாகரன், எஸ். சாந்தகுமாரி, பாபு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் இ. தயாளன், ஏ. வைத்திலிங்கம், அய்யாதுரை உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.