சிதம்பரம், ஜன் 9- சிதம்பரம் உதவி ஆட்சியர் அலு வலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செய லாளர் கொளஞ்சியப்பன் தலைமையில் கொத்தட்டை ஊராட்சி கே பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் சிதம்பரம் உதவியாளர் சுவேதா சுமனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கே. பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த செந்தாமரை, மலர்கொடி, தீபா, சங்கீதா, தேவி, அஞ்சம்மாள் உள்ளிட்ட 11 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் இவர்களுக்கு குடிமனை பட்டா இல்லை என்றும் இவர்கள் அனைவரும் தினக்கூலி மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும் அவர்கள் வசிக்கும் பகுதியில் புதிய மனை பட்டா வழங்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள னர். மேலும் புதிய மனை பட்டா கேட்டு புவனகிரி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். இவருடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம் உடன் இருந்தார்.