districts

தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து பராமரிக்கப்படுகிறதா நடராஜர் கோயில் ? பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சிதம்பரம், நவ. 2- சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சொத்துக்கள் மற்றும் நகைகள்  உள்ளிட்ட கணக்குகளை இந்து சமய அறநிலைத் துறை ஆய்வு செய்ய  அனுமதி கேட்டபோது நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என ஒத்துழைக்க மறுத்தனர்.  பின்னர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை கணக்கு களை சரிபார்க்க ஒப்புதல் அளித்தனர். அதனடிப்படையில் இந்து சமய அற நிலைத்துறை அதிகாரிகள் கொண்ட குழு கோவிலில் உள்ள சொத்து விவரங் கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர். இதனைதொடர்ந்து கடந்த 1950ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு  வரை உள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் கணக்குகளை ஆய்வு செய்ய அறநிலையதுறை கடிதம் அளித் தனர். இதற்கு கோவில் தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.   இந்நிலையில் இந்து சமய அற நிலைத்துறை ஆணையர் குமரகுரு பரன் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தீட்சிதர்கள் சமுதாயத்தினால் நடராஜர் கோயில் கட்டப்பட்டதற்கான ஆதாரம், கோவில் தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து பராமரிக்கப் பட்டு வருவதற்கான ஆதாரங்கள்,  தீட்சிதர்களின் சொந்த நிதியிலிருந்து தினசரி பூஜை, திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், கோவிலில் பொது மக்களிடமிருந்து பல்வேறு முறை யில் நன்கொடைகள் பெற்று தினசரி  பூஜை மற்றும் பராமரிப்பு மேற்கொள் ளப்படுகிறது என்றால் அதுகுறித்த வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும், கோவில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய் துறை  ஆவணங்கள், நில உரிமை கடவுள் பெயரில் இருப்பின் அது மன்னர்களால் வழங்கப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் கடவுள் பெயரில் வழங்கப்பட்டதா? என்ப தற்கான ஆவணங்களை வரும் 15ஆம்  தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தங்களிடம் விவரங்கள் எதுவும் இல்லை என்றும்,  அடிப்படை ஆவணங்கள் ஏதுமின்றி ஊடகங்களில் தங்களால் தவறான தகவல்கள் தரப்படுகிறது என முடிவு செய்து அறநிலைத்துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

;