districts

img

நத்தம் புறம்போக்கில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க சிபிஎம் கோரிக்கை

கடலூர், பிப்.8- புதுப்பாளையம் பகுதியில் நத்தம் புறம்போக்கில் குடியிருப்புகளுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், குடியிருப்போர் நல சங்க தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் தியாகராஜன், இணைச் செய லாளர் ரமேஷ், துணைப் பொருளாளர் ஞான சேகரன், கிளைச் செயலாளர் பூபதி, ஆகி யோர் மனு அளித்தனர். அந்த மனுவில் புதுப்பாளையம் பகுதியில் 73 குடும்பங்கள் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்த இடம் திரவுபதி அம்மன் கோயில் நிலம் என்ற தவறான தகவலின் படி அந்த கோவிலின் அறங்காவலர் மாரியப்பன் என்பவர் இவர்களை ஏமாற்றி தீர்வை வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் சம்பந்தமாக கடலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அறங்காவலர் என்ற கூறிக்கொள்ளும் மாரியப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இடம் அவருக்கு சொந்தமில்லை என்றும், அவர் அறங்காவலர் இல்லை என்றும் 23.9.22 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் குடி யிருக்கும் வீட்டுமனைக்கு அனைத்தும் திரவுபதி அம்மன் கோவில் நிலம் அல்ல என்றும் அனைத்தும் புறம்போக்கு மற்றும் நத்தம் என்றும். இதற்கு போலி அறங்காவலர் மாரியப்பன் என்பவருக்கும் எந்தவித சம்மதம் கிடையாது என்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 73 குடும்பங்களுக்கு உடனடியாக பட்ட வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.