சிதம்பரம், ஜூலை 9- பரங்கிப்பேட்டை அருகே சாமியார் பேட்டை யில் சுருக்குமடி வலைக்கு எதிராக 2 ஆயிரம் மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரை யில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிக குதிரை திறன் கொண்ட எந்திர படகு கள் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. இவைகளை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தடையை மீறிச் சுருக்கு மடி வலை, அதிக திறன்கொண்ட விசைபடகு களை கொண்டு மீன் பிடிப்பதை கண்டித்தும் கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி மாநிலம் வீரமா பட்டனம் ஆகிய 3 மாவட்டங் களைச் சேர்ந்த மீனவ பெண்கள் உள்ளிட்ட 2 ஆயி ரத்தும் மேற்பட்ட மீன வர்கள் கருப்பு கொடி யுடன் சுருக்குமடி வலையைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பாண்டியன் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவாகப் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் மாவட்ட ஆட்சியர் தடை செய்யப்பட்ட வலைகள் தடை செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடு வோம் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கிருஷ்ணன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், மீனவளத்துறை உதவி இயக்குநர் சுப்பரமணி யன் ஆகியோர் போராட் டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும் 5 நாட்களில் சுருக்கு மடி வலை, அதிக திறன் கொண்ட விசை படகு உள்ளிட்டவைகளை முற்றிலும் தடைசெய்யப் படும் என்று உறுதி கூறி னார்கள். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.