கடலூர், ஜூன் 16- தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற படகு கள் குறைந்த அளவு மீன்க ளுடன் கடலூர் துறை முகத்திற்கு வந்தது. இத னால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சோணங்குப்பம்,அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங் கோவில் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகு களில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வரு கின்றனர்.
இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்கி செல்வர். இதனால் அதிகாலை முதல் கடலூர் துறைமுகம் மீன்பிடித் தளம் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது, மீன வர்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நள்ளி ரவு மீனவர்கள் தங்கள் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை, மிக மிகக் குறைந்த அளவி லேயே படகுகள் கரை திரும்பின. அதாவது சுமார் ஐந்து முதல் பத்து படகுகள் வரை கரைக்கு திரும்பியதால், மீன்கள் வரத்து மிக மிக குறைவாக காணப்பட்டது. இதனால் மீன்கள் விலையும் அதி கரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கு, சங்கரா மீன் கிலோ ரூ. 500, இறால் வகைகள் ரூ.300 முதல் 600 வரைக்கும், கணவாய் வகை மீன்கள் 400 ரூபாய்க்கு, பன்னி சாத்தான் 600 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டது.