districts

img

சம வேலைக்கு சம ஊதியம் கடலூரில் நடந்த மகளிர் தின கருத்தரங்கில் பி.சுகந்தி வலியுறுத்தல்

கடலூர், மார்ச் 20 - சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் பி.சுகந்தி வலியுறுத்தி னார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கடலூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு (சிஐடியு) ஆகிய அமை ப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தினர். இந்த கருத்தரங்கில் பேசிய பி.சுகந்தி, பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும். அதற்கு கடுமையான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்கள் கூட பல இடங்களில் இல்லை. கல்வி வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி பல்லாண்டுகளாக போராடி வருகிறோம்” என்றார். “பாஜக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு வன்முறையும், பெண்ணடிமைத்தன கருத்துக்களும் மேலோங்கி உள்ளன. மதசார்பற்ற இந்தி யாவை மீட்டெடுக்க உறுதி யேற்போம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்விற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.தேன்மொழி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கே.சாவித்திரி ஆகியோர் தலைமை தாங்கி னர். சிஐடியு மாநில துணைத்  தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்டத் தலைவர் டி.பழனி வேல், செயலாளர் பி.கருப் பையன், மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டத் தலைவர் பி. முத்துலட்சுமி, பொருளாளர் வி.மேரி, நிர்வாகிகள் வி. மல்லிகா, கே.அன்பு செல்வி உள்ளிட்டோர் பேசினர்.