கடலூர், ஜூலை.8- கடலூர் வண்டிபாளை யம் குளக்கரையில் குடி யிருப்பவர்களுக்கு மாற்று இடம் கொடுத்த பிறகே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கடலூர் மாநகர செய லாளர் ஆர். அமர்நாத் தலை மையில் செயற்குழு உறுப்பி னர் வி.சுப்புராயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். அதன் விவரம் வருமாறு:- கடலூர் மாநக ராட்சிக்குட்பட்ட 32வது வார்டில் அரசுக்கு சொந்த மான குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வரு கிறது. அந்த குளக்கரை யில் வீடுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளது. குளத்தை உரிய முறை யில் அளவீடு செய்து தூர்வார வேண்டும். மேலும் அங்கு பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய மாற்றிய இடம் மற்றும் வீடு ஆகியவற்றை வழங்கி அவர்களுக்கு உரிய காலம் அவகாசம் வழங்கி வீடுகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாற்று இடம் வழங்காதவரையில் வீடுகளை அப்புறப்படுத்த கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.