districts

img

எப்ஆர்பி பணத்தை வட்டியுடன் வழங்கிடுக: விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூன் 27- கரும்பு விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய எப்ஆர்பி பணத்தை வட்டி யுடன் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் விருத்தாசலத் தில் சார் ஆட்சியர் அலுவல கத்தில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

4 ஆண்டுகால நிலுவைத் தொகை ரூ.28.62 கோடியை நீதிமன்ற உத்தரவுபடி வழங்க வேண்டியும், லாப  பங்கீடு தொகை 5 ஆண்டு களுக்கு உள்ளதை வழங்கி ஆலையை விரைவில் துவக்கி நடத்த வலியுறுத்தி கரும்பு விவசாயிகளின் பணத்தைக் கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அம்பிகா ஆலை பகுதி தலைவர் இரா. இராஜேந் திரன் தலைமையில்  பேரணியாக வந்து மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் செயலாளர் டி.வரதன், பொருளாளர் கே.கொளஞ் சிநாதன், தலைவர் ஆர். கோவிந்தன், செயலாளர் கே.செல்வகுமார், வட்ட குழு உறுப்பினர்கள் யு.சுந்தர வடிவேல், பி.பெரியசாமி,  பி.செந்தில், மார்க்கெட் கே.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில பொதுச் செயலா ளர் டி.ரவீந்திரன், மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், மாவட்ட தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன், மாநில  செயலாளர் கே.ராஜேந்தி ரன், விவசாய சங்க மாவட்ட  செயலாளர் ஆர்.கே.சர வணன், வட்ட செயலாளர் வட்ட செயலாளர் ஆர்.கலைச்செல்வன் உள்ளிட் டோர்  இதில்  கலந்து கொண் டனர்.