districts

img

இழுவலை விசை படகுக்கு டீசல் மானியம் நிறுத்தம்

கடலூர், பிப். 2- விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்டிக்கல் மைல்களுக்குள்ளாக கரை பகுதிகளில் இழுவலை பயன்படுத்திய விசைப்படகு கண்டறியப்பட்டு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. கடல் கடற்கரையில் இருந்து 5 மைல்களுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது என உத்தரவு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் சார் ஆய்வாளர் பிரபாகரன், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது விதிமுறைகளுக்கு புறம்பாக 5 கடல் மைல்களுக்  குள்ளாக அக்கரைக்கோரி கரை பகுதிகளில் இழுவலை பயன்படுத்திய 1 விசைப்படகு கண்டறியப்பட்டு அப்படகின் மீது குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் டீசல் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.